திருச்சி- நல வாரியம் அமைக்க, கால்நடை மேய்ப்போர் சங்கம் கோரிக்கை

 

திருச்சி- நல வாரியம் அமைக்க, கால்நடை மேய்ப்போர் சங்கம் கோரிக்கை

திருச்சி

கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்பவர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் மற்றும் மேய்ப்போர் நல உரிமை கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. திருச்சியில் இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் நல வாரியம் அமைத்தல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி- நல வாரியம் அமைக்க, கால்நடை மேய்ப்போர் சங்கம் கோரிக்கை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிர்வாகி சிவபெருமாள் யாதவ்,

திருச்சி- நல வாரியம் அமைக்க, கால்நடை மேய்ப்போர் சங்கம் கோரிக்கை

தமிழக அரசு கால்நடை மேய்ப்போர் மற்றும் வளர்ப்போருக்கு என தனி வாரியம் அமைக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனை உடனடியாக அமைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், கால்நடைகளை வாகனங்களில் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும்போது காவல் துறையினரின் கெடுபிடியை தவிர்க்க ஆடு, மாடு மேய்க்கும் தனி அட்டை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்..