திருச்சி- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் – கே.என் நேரு சாமி தரிசனம்

 

திருச்சி- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் – கே.என் நேரு சாமி தரிசனம்

திருச்சி

ஆண்டுதோறும், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது, புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமையில் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும், இந்நாளில் பெருமாளை தரிசனம் செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை கிடைக்கும் என்ற ஐதிகமாக பார்க்கப்படுகிறது.

திருச்சி- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் – கே.என் நேரு சாமி தரிசனம்

அதன்படி இன்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை இன்று பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் 108 வைணவத் தலங்களில் முதன்மையானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று நம்பெருமாள் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் – கே.என் நேரு சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்களும் தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாதவர்கள் டோக்கன் பெற்று நம் பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்சி- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் – கே.என் நேரு சாமி தரிசனம்

இன்று, காலை திமுக முதன்மை செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே. என். நேரு, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்து மூலஸ்தானத்தில் உள்ள பெருமாளை தரிசனம் செய்தார். பின்னர் ரெங்க நாச்சியாரை தரிசனம் செய்து விட்டு சென்றார். முன்னதாக கோயிலுக்கு வருகை தந்த கே. என். நேருவுக்கு கோவில் சுந்தர் பட்டர் வரவேற்பு அளித்தார்.