“மகன் தொகுதில ஆப் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்” – திருநா மீது கொதிப்பில் திமுக உபிக்கள்!

 

“மகன் தொகுதில ஆப் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்” – திருநா மீது கொதிப்பில் திமுக உபிக்கள்!

திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், “திருச்சியில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் எம்பியானார். வெற்றிபெற்றதோடு சரி திருச்சி பக்கமே அவர் எட்டிப் பார்ப்பதில்லை. அவரை தேடி கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என்று விமர்சித்திருந்தார். கிட்டத்தட்ட அதே டோனில் தான் திமுக உடன்பிறப்புகளும் திருநாவுக்கரசரை கரித்துக் கொட்டுகின்றனர். தோழமை கட்சிகளின் வெற்றிகளை விட தன் மகனின் வெற்றியே அவருக்குப் பிரதானமாக பட்டதே அதற்குக் காரணம்.

“மகன் தொகுதில ஆப் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்” – திருநா மீது கொதிப்பில் திமுக உபிக்கள்!

அடித்துப் பிடித்து தன் மகன் ராமச்சந்திரனுக்கு அறந்தாங்கி தொகுதியில் சீட் வாங்கி கொடுத்துவிட்டார். தற்போது மகனின் வெற்றிக்காக அங்கேயே குடியிருக்கிறார். மகனை விட தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த திருச்சி திமுகவினர் ஓபனாகவே கேட்டுவிட்டார்களாம். திருச்சி மக்களவை தொகுதியில் இருக்கும் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகளில் ஒன்றில் கூட பிரச்சாரம் செய்யவில்லை என கடுகடுக்கிறார்கள். திமுகவின் திருச்சி தளபதி கேஎன் நேருவே கூப்பிட்டும் மதிப்பு கொடுக்காமல் அறங்தாங்கியே கதி என கிடக்கிறராம் திருநாவுக்கரசர்.

“மகன் தொகுதில ஆப் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்” – திருநா மீது கொதிப்பில் திமுக உபிக்கள்!

அதிருப்தியில் இருக்கும் திருச்சி உபிக்களிடம் விசாரித்தால் பொங்கல் வைக்கிறார்கள். எம்பி தேர்தலில் அவரின் வெற்றிக்கு மாடாய் உழைத்தோம். ஆனால் எங்களை மறந்துவிட்டார். அறங்தாங்கியில் எங்களுடைய ஆட்களை ஆப் செய்ய ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் தலைவரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறோம் என்று பொறிந்து தள்ளிவிட்டார்கள். இதுகுறித்து திருநா தரப்பில் விசாரித்தபோது, திருநாவுக்கரசர் பிரச்சாரம் செய்தாலும் திருச்சியில் திமுக ஜெயிக்கப் போவதில்லை என பதில் சொல்கிறார்கள்.