எம்.ஜி.ஆர். சிலைக்கு, காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்மநபர்களால் பரபரப்பு

 

எம்.ஜி.ஆர். சிலைக்கு, காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்மநபர்களால் பரபரப்பு

திருச்சி

திருச்சி நகர் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆர் சிலைக்கு, மர்மநபர்கள் காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சிலை உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பராமரிப்பு பணிக்காக சென்ற மாநகராட்சி ஊழியர்கள் சிலர், சிலையின் தலை பகுதியில் காங்கிரஸ் துண்டால் முக்காடு போடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு, காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்மநபர்களால் பரபரப்பு

பின்னர், இதுகுறித்து அதிமுக நிர்வாகிகளுக்கு அவர்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற அமைச்சர் வெல்லமண்டி நடராஜனின் மகன் ஜவகர், துண்டை அப்புறப்படுத்தியதுடன், இதுகுறித்து செஷன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், எம்ஜிஆர் சிலையை தண்ணீரால் சுத்தம் செய்து, பாலாபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு, காங்கிரஸ் துண்டால் முக்காடு போட்ட மர்மநபர்களால் பரபரப்பு

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் இங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். மேலும், போலீசாரின் விசாரணைக்கு பிறகு சிலையை சுற்றி கம்பிவேலி அமைப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.