திருச்சி மத்திய சிறை காவலர், கொரோனாவுக்கு பலி!

 

திருச்சி மத்திய சிறை காவலர், கொரோனாவுக்கு பலி!

திருச்சி

திருச்சி மத்திய சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட விருதுநகரை சேர்ந்த முதல் நிலை காவலர் உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணசுவாமி. இவர் திருச்சி மத்திய சிறையில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நாராயணசுவாமிக்கு கடந்த 25-ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

திருச்சி மத்திய சிறை காவலர், கொரோனாவுக்கு பலி!

இதனையடுத்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று நாராயணசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி மத்திய சிறையில் நாராயணசுவாமி உள்பட 15 காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 10-க்கும் மேற்பட்டோர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், திருச்சியிலேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட காவலர் நாராயணசுவாமி உயிரிழந்தது, சக காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.