மீன் மார்க்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர சி.பி.ஐ கோரிக்கை

 

மீன் மார்க்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர சி.பி.ஐ கோரிக்கை

திருச்சி உறையூர் பகுதியில் திறக்கப்பட்டுள்ள புதிய மீன் மார்க்கெட்டில் கழிப்பறை உள்ளிட்ட சுகாதார வசதிகளை ஏற்படுத்தி தரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. கடந்த 10 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வந்த புதிய மார்க்கெட்டில் போதிய சுகாதார வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.

மீன் மார்க்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர சி.பி.ஐ கோரிக்கை

இந்நிலையில், புதிய மார்க்கெட்டில் மீன்வெட்டும் இடங்களில் சிமெண்ட் தளம் மற்றும் மேற்கூரை அமைத்து தருதல் மற்றும் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி ஏற்படுத்தி தருதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், திருச்சி மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

மீன் மார்க்கெட்டில் கழிப்பறை வசதி செய்து தர சி.பி.ஐ கோரிக்கை