“7.5% உள்ஒதுக்கீடு – எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி” – கே.எஸ். அழகிரி

 

“7.5% உள்ஒதுக்கீடு – எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி” – கே.எஸ். அழகிரி

திருச்சி

மருத்துவ படிப்பில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியது, எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க விமானம் மூலம் திருச்சி வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஆளுநர்

“7.5% உள்ஒதுக்கீடு – எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி” – கே.எஸ். அழகிரி

எதிர்க்கட்சிகளின் அழுத்தம் தாங்காமலேயே, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்த கே.எஸ்.அழகிரி, நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்தால், அதிமுகவின் கால்கள் உடைந்ததாகவும், அதிமுகவிற்கு கால் இல்லாத நிலையில் பாஜகவை காலூன்ற வைப்பது இயலாது என்றும் அவர் கூறினார். தொடர்ந்து,

பாஜகவில் இணையும் நட்சத்திரங்கள் ஒளியிழந்தவர்கள் என்றும் அவர்களால் ஜொலிக்க முடியாது என்று கூறிய கே.எஸ்.அழகிரி, தமிழகம் மதச்சார்பற்ற ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்ட மண் என்றும், இங்கு வேற்றுமையை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.