கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Oct 22, 2020, 21:16 IST1603381581000
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு, பாதுகாப்பு விதிமுறைகளுடன் அனைத்து பேருந்துகளையும் இயக்குதல், பிடித்தம் செய்த விடுப்புகளை திரும்ப வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.