சென்னையில் நாளை முதல் 25 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்!
Jul 10, 2020, 17:50 IST1594383649000
சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் முன்பாக சுரங்கப்பாதை கட்டுமானப் பணி நடப்பதால் நாளை முதல் 25 ஆம் தேதி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் குறித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “
- சென்னை பூக்கடை போக்குவரத்து உட்கோட்டத்தில் நாளை முதல் 15 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- அண்ணாச்சாலையில் இருந்து பல்லவன் சாலை வழியாக ஈவிஆர் சாலை வருபவர்கள் இதே சாலையில் செல்லலாம்
- முத்துசாமி சாலையிலிருந்து அண்ணா சாலை செல்பவர்கள் முத்துசாமி பாலம்- வாலாஜா பாயிண்ட் சென்று, அண்ணா சாலையை அடையலாம்
- ஈவினிங் பஜார் சாலையிலிருந்து அண்ணா ஆலை செல்பவர்கள் ஈவினிங் பஜார் சாலை வழியாக இடதுபுறம் திரும்பி ஈவிஆர் சாலை சென்று வலதுபுறம் திரும்பி, முத்துசாமி பாலம் – வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணா சாலையை அடையலாம்.
- ஈவினிங் பஜார் சாலையில் இருந்து செண்ட்ரல் ரயில்வே நிலையம் முன்பாக உள்ள ஸ்டாலின் வையடாக் மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்ல முடியது.
- வால்டாக்ஸ் சாலையிலிருந்து அண்ணாசாலை செல்பவர்கள் இடதுபுறம் திரும்பி ஈவிஆர் சாலை சென்று வலது பக்கம் திரும்பி முத்துசாமி பாலம் வழியாக வாலாஜா பாயிண்ட் சென்று அண்ணா சாலையை அடையலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.