தருமபுரி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலி!

 

தருமபுரி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலி!

தருமபுரி

தருமபுரி அருகே டிராக்டர் சாலையில் கவிழ்ந்த விபத்துக்கு உள்ளானதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த காமராஜ் நகரை சேர்ந்தவர் விவசாயி வீரமணி(47). இவர் தனது டிராக்டரை பாளையம்புதூரில் உள்ள மெக்கானிக் கடையில் பழுது பார்ப்பதற்காக விட்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை கடையில் இருந்து டிராக்டரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

தருமபுரி அருகே டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் விவசாயி பலி!

வீரமணியுடன், அவரது உறவினரான மன்னன்(27) என்பவரும் டிராக்டரில் சென்றார். பாளையம்புதூர் அடுத்த கூல்மாரிகோட்டை பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, டிராக்டர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. இதில் படுகாயம் அடைந்த வீரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மன்னனை அருகில் இருந்தவர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.