காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மத்திய அரசுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம்

 

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மத்திய அரசுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம்

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மத்திய அரசுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தரக் கோரி மத்திய அரசுக்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம்

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுறுத்தலின்படி கடலோர பகுதியில் சமீபத்தில் காணாமல் போன தமிழக மீனவர்களை மீட்டுத்தர கோரி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை இன்று (21.5.21) கழக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர்.பாலு அவர்கள் நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்துள்ளார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒன்பது தமிழக மீனவர்கள் லட்சத் தீவு அருகில் படகுக் கோளாறினால் காணாமல் போனதையடுத்து, அவர்களை மத்திய கடலோர காவல் படையினரின் உதவியுடன் உடனடியாக மீட்டுத்தர வேண்டுமென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதுகாப்புத்துறை அமைச்சருக்கு கடந்த 16-ஆம் தேதியன்று கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி இன்று கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர்.பாலு அவர்கள் புதுடெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து, தமிழக மீனவர்களை உடனடியாக மீட்டுத்தர ஆவண செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது மத்திய அமைச்சர் அவர்கள் உடனடியாக தமிழக மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த கடலோர காவல் படையினரின் தலைமை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தேடுல் பணி துரிதப்படுத்தபடும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் தெரிவிக்குமாறு திரு. டி.ஆர்.பாலு அவர்களிடம் கூறியுள்ளார்