நாளை உருவாகிறது டவ்-தே புயல் : தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்!

 

நாளை உருவாகிறது டவ்-தே புயல் : தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்!

அரபிக்கடலில் இன்னும் 24 மணி நேரத்தில் புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நாளை உருவாகிறது டவ்-தே புயல் : தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்!

அரபிக்கடலில் நாளை டவ்-தே புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் உருவாவதால் தமிழகம், கேரளாவில் இன்று மற்றும் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

நாளை உருவாகிறது டவ்-தே புயல் : தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்!

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது.இதனால் அரபிக்கடலில் உருவாகும் புதிய புயலுக்கு டவ்-தே என பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளது.