“10,978 காவலர் பணியிடங்கள்” விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

 

“10,978 காவலர் பணியிடங்கள்” விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் 10,978 காவலர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“10,978 காவலர் பணியிடங்கள்” விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையில் உள்ள 10,978 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த மாதம் 26ம் தேதி வெளியானது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் 10ம் வகுப்பு முடித்து, 18-24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் www.tnusrbonline.org என்ற இணையவழி வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.

“10,978 காவலர் பணியிடங்கள்” விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

அதே போல, இந்த காலி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 13ம் தேதி நடைபெறும் என்றும் 37 மாவட்டங்களில் தேர்வு நடத்தப்படும் என்றும் எழுத்துத் தேர்வுக்கு 80 மதிப்பெண், உடற் திறன் போட்டிக்கு 15 மதிப்பெண் மற்றும் சிறப்பு மதிப்பெண் 5 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்கு குழுமம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இணையவழி தவிர விண்ணப்பபடிவம் மற்றும் தட்டச்சு படிவம் மூலமாக விண்ணப்பித்தால் அவை நிராகரிக்கப்படும் என்றும் தெரிகிறது.