டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

 

டிஎன்பிஎல்- நெல்லை ராயல் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 23வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற சேலம் ஸ்பாட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Image

சேலம் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க விஜய் சங்கர் மற்றும் அபிஷேக் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். விஜய் சங்கர் 41 ரன்களும்,அபிஷேக் 25 ரன்களிலும் ஆட்டமிழக்க,அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் சேலம் ஸ்பாட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.சிறப்பாக பந்துவீசிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் அபராஜித்,ஹரிஷ் மற்றும் டேவிட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

121 என்ற எளிய இலக்குடன் ஆடிய நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் அபராஜித் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரஞ்சன் பால் 23 ரன்களும்,சஞ்சய் யாதவ் 46 ரன்களும் சேர்த்து நெல்லை அணியின் வெற்றியை உறுதி செய்தனர். 18.3 ஓவர் முடிவில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.