டிஎன்பிஎல்: 16 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி!

 

டிஎன்பிஎல்: 16 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணி வெற்றி!

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 7வது போட்டியில் சேலம் ஸ்பாட்டன்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

Image

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சேலம் அணியில் அபிஷேக் 38 ரன்களும் விஜய்சங்கர் 26 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.பெராரியோ மட்டும் அதிகபட்சமாக 40 ரன்கள் சேர்த்தார்.20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை சேலம் எட்டியது.

165 இன்று இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய திருப்பூர் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பிரான்சிஸ் ராக்கின்ஸ் மட்டும் சிறப்பாக ஆடி 58 ரன்கள் எடுக்க , மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணியால் 148 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் சேலம் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.