டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

 

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

டாஸ் வென்ற ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நெல்லை அணியின் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் அபராஜித் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் சூரியபிரகாஷ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் வந்த அர்ஜுன் மூர்த்தி 16 பந்துகளில் 35 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.19.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்தது. திருப்பூர் அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய ராஜ்குமார் மற்றும் முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

Image

149 என்ற இலக்குடன் தனது இன்னிங்சை தொடங்கிய திருப்பூர் அணி, முகம்மது ஆசிக் மற்றும் துசார் ஆகியோர் விக்கெட்டுகளை விரைவாக இழந்தது. பிறகு சித்தார்த் மற்றும் பப்னா ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதியில் திருப்பூர் அணி 7 விக்கெட்களை இழந்து 19.5 ஓவரில், 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.