பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

 

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

திடீர் பயணமாக டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு விவகாரம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மௌனம் காப்பதாக தொடர்ந்து கருத்துக்கள் எழுந்த வண்ணம் இருந்தன. அண்மையில் உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், எழுவர் விடுதலை தொடர்பாக இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

இதை தொடர்ந்து நேற்று முன் தினம், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆளுநரை நேரில் சந்தித்து பேசிய நிலையில், திடீரென இன்று 3 நாள் பயணமாக டெல்லிக்கு புறப்பட்டார் ஆளுநர். முன்னறிவிப்பின்றி ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு!

தமிழக அரசியல் நிலவரம், கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமருடன் ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நாளை சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.