தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 15,512 ஆக உயர்வு!!

 

தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 15,512 ஆக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 53லட்சத்து 31ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 40ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை சுமார் 14 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தமிழகத்தில் புதிதாக 759 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 15,512 ஆக உயர்வு!!

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 756பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 429பேர் ஆண்கள், 330பேர் பெண்கள் மற்றும் இருவர் திருநங்கைகளாவர். தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 363பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,491ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 68ஆய்வகங்கள் உள்ளன. இன்று மட்டும் 12,155 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,97,340ஆக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.