கைக்கொடுக்காத ஊரடங்கு…தமிழகத்தில் 30,000ஐ தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு!

 

கைக்கொடுக்காத ஊரடங்கு…தமிழகத்தில் 30,000ஐ தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 30லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

கைக்கொடுக்காத ஊரடங்கு…தமிழகத்தில் 30,000ஐ தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு!

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 29,272பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14லட்சத்து 38ஆயிரத்து 509ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,62,181ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 16,983பேர் ஆண்கள், 12,289பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 7,466பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கைக்கொடுக்காத ஊரடங்கு…தமிழகத்தில் 30,000ஐ தொட்ட தினசரி கொரோனா பாதிப்பு!

இன்று 298 பேர் உயிரிழந்துள்ளார். 106பேர் தனியார் மருத்துவமனையிலும், 192 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,178ஆக அதிகரித்துள்ளது. இன்று 19,182பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,60,150ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.