தமிழகத்தில் 15,000ஐ நெருங்கியது தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1கோடியே 66 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 14,799பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 66ஆயிரத்து 329ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,00,668ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 8,874பேர் ஆண்கள், 5,968பேர் பெண்கள். தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 80 பேர் உயிரிழந்துள்ளார். 41 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 39 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,475ஆக அதிகரித்துள்ளது. இன்று 9,142பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,52,186ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது