‘கலைவாணர் அரங்கில்’..செப்டம்பர் 14 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

 

‘கலைவாணர் அரங்கில்’..செப்டம்பர் 14 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

வரும் செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு இரண்டு முறை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட்டப்படும். அதன் படி இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் கொரோனா பாதிப்புக்கு முன்னர் நடந்து முடிந்த நிலையில், குளிர்கால கூட்டத்தொடரை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வந்தது. இதனிடையே கொரோனா பரவியதால் கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என கேள்வி எழுந்தது. அதுமட்டுமில்லாமல் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதும் கூட்டத்தொடரை நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தியது.

‘கலைவாணர் அரங்கில்’..செப்டம்பர் 14 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

இதனையடுத்து, வழக்கமாக நடைபெறும் இடத்தை விட மாற்று இடத்தில் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டதால் சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் கலைவாணர் அரங்கில் சபாநாயகர் ஆய்வு செய்தார். இந்த நிலையில், கலைவாணர் அரங்கில் வரும் 14 ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடக்கும் என பேரவை செயலர் அறிவித்துள்ளார். அன்றே சபாநாயகர் தலைமையில் அலுவல் கூட்டம் நடத்தி, எத்தனை நாட்கள் கூட்டத்தொடர் நடக்கும் என அறிவிக்கப்பட உள்ளது.

‘கலைவாணர் அரங்கில்’..செப்டம்பர் 14 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

மேலும், தனிமனித இடைவெளி பின்பற்றி கூட்டத்தொடர் நடத்தப்படும் என்றும் கூட்டத்திற்கு முன்பாக எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.