“முருகன் இருக்கும் வரை தாமரை மலராது” – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்!

 

“முருகன் இருக்கும் வரை தாமரை மலராது” – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்!

திமுக குறித்து எல்.முருகன் பேசியதை விமர்சித்த டி.கே.எஸ் இளங்கோவன், அவர் இருக்கும் வரை தாமரை மலராது என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் என்பதாலும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக முதன்முறையாக களம் காணுவதாலும் இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

“முருகன் இருக்கும் வரை தாமரை மலராது” – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்!

இதனிடையே தேர்தல் களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திமுக, தேர்தல் அறிக்கை குழுக் கூட்டத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடத்தியது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், திமுகவின் தேர்தல் அறிக்கை ஜீரோ தான் என தெரிவித்திருந்தார்.

“முருகன் இருக்கும் வரை தாமரை மலராது” – டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம்!

இந்த நிலையில் எல்.முருகனின் கருத்துக்கு பதில் அளித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.எஸ் இளங்கோவன், முருகன் போன்றோர் இருக்கும் வரை தாமரை மலராது, பாஜக வளராது என பதிலடி கொடுத்துள்ளார்.