‘கபே காபி-டே’ சித்தார்த்தின் மகனை கரம் பிடிக்கும் டி.கே.சிவக்குமார் மகள்!

 

‘கபே காபி-டே’ சித்தார்த்தின் மகனை கரம் பிடிக்கும் டி.கே.சிவக்குமார் மகள்!

கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமாரின் மகளான ஐஸ்வர்யாவிற்கும், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் பேரனும், மறைந்த கபே காபி-டே அதிபர் சித்தார்த்தின் மகனுமான அமர்த்யாவுக்கும் இன்று பெங்களூரில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

‘கபே காபி-டே’ சித்தார்த்தின் மகனை கரம் பிடிக்கும் டி.கே.சிவக்குமார் மகள்!

கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி கபே காபி-டே அதிபர் சித்தார்த் தற்கொலை செய்து கொண்டார். அவர் இருக்கும் போதே இவர்களது திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது.

‘கபே காபி-டே’ சித்தார்த்தின் மகனை கரம் பிடிக்கும் டி.கே.சிவக்குமார் மகள்!

ஆனால் எதிர்பாராத விதமாக தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சித்தார்த் தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக, ஒரு ஆண்டுக்கு எந்த நிகழ்வும் நடக்கக்கூடாது என்பதால் இவர்களது திருமண பேச்சு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் டிகே சிவகுமார் வீட்டிலேயே எளிமையாக அமர்த்யா- ஐஸ்வர்யா நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.

‘கபே காபி-டே’ சித்தார்த்தின் மகனை கரம் பிடிக்கும் டி.கே.சிவக்குமார் மகள்!

இந்த நிலையில் தான், பெங்களூருவில் உள்ள ஓட்டலில் டிகே சிவக்குமாரின் மகள் திருமணம் வெகு விமர்சையாக நடத்தப்பட்டுள்ளது. இவர்களின் திருமணம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்க உள்ளதாக தெரிகிறது. இந்த நிகழ்ச்சியில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா கலந்து கொண்டுள்ளார்.


அமர்த்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து விலகி கடந்த 2017ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். இதன் காரணமாகவே எடியூரப்பா இந்த நிச்சயதார்த்ததில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.