நள்ளிரவில் பைனான்சியர் வெட்டிக்கொலை; போலீசார் தீவிர விசாரணை

 

நள்ளிரவில் பைனான்சியர் வெட்டிக்கொலை; போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் நள்ளிரவில் பைனான்சியர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ள ராதாராஜ் நகரை சேர்ந்தவர் சரவணக்குமார்(34). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவருக்கு, சரண்யா என்ற மனைவியும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு வழக்கம்போல் பணிமுடிந்து சரவணகுமார், தனது உறவினர் மகேந்திரன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

நள்ளிரவில் பைனான்சியர் வெட்டிக்கொலை; போலீசார் தீவிர விசாரணை

வீட்டின் அருகே சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த மர்மகும்பல் சரவணகுமார் வாகனத்தை மறித்து, அவரை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த சரவணக்குமார் சம்பவ இத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

நள்ளிரவில் பைனான்சியர் வெட்டிக்கொலை; போலீசார் தீவிர விசாரணை

தொடர்ந்து மோப்ப நாய் லிண்டா மற்றும் கைரேகை நிபுணர்களை வர வழைத்து தடயங்களை சேகரித்த போலீசார், கொலையாளிகள் விட்டுச்சென்ற கத்தியை பறிமுதல் செய்தனர். பின்னர், கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.