திருவள்ளூர்- பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி, ரூ.2 லட்சம் கொள்ளை!

 

திருவள்ளூர்- பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி, ரூ.2 லட்சம் கொள்ளை!

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பெட்ரோல் பங்கில் ஊழியர்களை தாக்கி, 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர்- பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி, ரூ.2 லட்சம் கொள்ளை!

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு 10.30 மணிக்கு மேல் 5 இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர், வாகனத்திற்கு பெட்ரோல் போடுமாறு கட்டாயப் படுத்தி உள்ளனர். 10 மணிக்கு மேல் பெட்ரோல் போடக்கூடாது என்ற அரசின் விதிமுறைகளை சொல்லி, பெட்ரோல் போட ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

திருவள்ளூர்- பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி, ரூ.2 லட்சம் கொள்ளை!

இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், பங்க் ஊழியர்கள் சத்யா, கண்ணன் மற்றும் மேலாளர் சின்னதுரை ஆகியோரை கடுமையாக தாக்கி, கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும், அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய, அந்த கும்பல் 2 லட்சம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்தனர். இந்நிலையில், பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருணாகரன் அளித்த தகவலின் பேரில், திருவள்ளூர் தாலுகா காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

திருவள்ளூர்- பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி, ரூ.2 லட்சம் கொள்ளை!

அப்போது போலீசார் வருவதை கண்ட அந்த கும்பல் 2 இருசக்கர வாகனங்களை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இந்த சம்பவத்தில் பங்க் ஊழியர்கள் சத்யா மற்றும் கண்ணன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் மீட்ட போலீசார், திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான

காட்சிகளையும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர் கருணாகரன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் விட்டுச்சென்ற இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, தப்பியோடிய குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.