திருவள்ளூர்- நகைக்காக அடித்துக் கொல்லப்பட்ட பெண் துப்புரவு பணியாளர்

 

திருவள்ளூர்- நகைக்காக அடித்துக் கொல்லப்பட்ட பெண் துப்புரவு பணியாளர்

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே நகைக்காக பேரூராட்சி பெண் துப்புரவு பணியாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியபாளையம் அடுத்த அக்ரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கௌரி அம்மாள்(40). ஆரணி பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வரும் அவர், நேற்று வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதே பகுதியில் உள்ள முட்புதரில் காது

திருவள்ளூர்- நகைக்காக அடித்துக் கொல்லப்பட்ட பெண் துப்புரவு பணியாளர்

அறுக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரியாளையம் போலீசார், கௌரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கௌரி அம்மாள்

திருவள்ளூர்- நகைக்காக அடித்துக் கொல்லப்பட்ட பெண் துப்புரவு பணியாளர்

கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலி மற்றும் கம்மல் ஆகியவை மாயமானது தெரியவந்தது. இதனால் மர்மநபர்கள் அவரை அடித்துக்கொலை செய்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.