கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி பணியாளர்கள்
Oct 23, 2020, 16:15 IST1603449953000
திருவள்ளூர்
குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும்
அங்கன்வாடி உதவியாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணி இடமாறுதல் வழங்கவும், 10 ஆண்டுகள் பணி முடித்த
உதவியாளரை, அங்கன்வாடி பணியாளராக பதவி உயர்த்தவும் வலியுறுத்தி அவர் கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தின் போது தீடீரென மழை பெய்த நிலையில், அதனை பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.