திருவள்ளூர்- வாட்ஸ்அப் குழு மூலம் கஞ்சா விற்பனை – 3 பேர் கைது

 

திருவள்ளூர்- வாட்ஸ்அப் குழு மூலம் கஞ்சா விற்பனை – 3 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டையில் வாட்ஸ்அப் குழு மூலம் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.நசரத்பேட்டை பகுதியில் வாட்ஸ்அப் குழு மூலம் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

திருவள்ளூர்- வாட்ஸ்அப் குழு மூலம் கஞ்சா விற்பனை – 3 பேர் கைது

இதன்பேரில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், கல்லூரி மாணவர்களை குறிவைத்து வாட்ஸ் அப் குழு மூலம் கஞ்சா விற்பனை நடைபெறுவது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஜஸ்டின் பிரபாகரன்(21), ஹேமகுமர்(21), சரண்ராஜ்(23), ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், வெளி மாநிலங்களிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து வாட்ஸ்அப் குழு மூலம் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.