தொடரும் வன்கொடுமைகள்… சின்னாபின்னமாகும் சிறுமிகள்… திருப்பூரில் மற்றொமொரு கொடூரம்!

 

தொடரும் வன்கொடுமைகள்… சின்னாபின்னமாகும் சிறுமிகள்… திருப்பூரில் மற்றொமொரு கொடூரம்!

27 வயது இளைஞர் ஒருவர் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் திருப்பூரில் அரங்கேறியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தின் அவினாசி வெள்ளிரவெள்ளி பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி வலி பொறுக்க முடியாமல் தனது தாயிடம் கூறியுள்ளார். மகளுக்கு நடந்தேறிய கொடுமை தெரியவந்ததால் இந்த சம்பவம் குறித்து அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார்.

தொடரும் வன்கொடுமைகள்… சின்னாபின்னமாகும் சிறுமிகள்… திருப்பூரில் மற்றொமொரு கொடூரம்!

அதையடுத்து, மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சரஸ்வதி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சிறுமியை வன்கொடுமை செய்த கண்ணனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.