திருப்பூரில் ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!

 

திருப்பூரில் ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!

திருப்பூர்

திருப்பூர் அருகே கணவர் இறந்த வேதனையில், தாய் மற்றும் அவரது மகன், மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் முதலிப்பாளையம் சிட்கோ மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராகவன். இவருக்கு செல்வி என்ற மனைவியும், அஸ்வின்(19), அகல்யா (17) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். அகல்யா, அங்குள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ராகவன் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்து விட்டார்.

இதனால் செல்வி மற்றும் அவரது குழந்தைகள் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்றிரவு செல்வி, ஊட்டியில் உள்ள தனது தங்கை மகாலெட்சுமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு, கணவர் இறந்ததால், தானும் குழந்தைகளும் தற்கொலை செய்துகொள்வதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

திருப்பூரில் ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தூக்கிட்டு தற்கொலை!

இதுகுறித்து மகாலெட்சுமி அளித்த தகவலின் பேரில் ஊத்துக்குளி போலீசார், உடனடியாக செல்வியின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது, செல்வி மற்றும் அவரது மகன் அஸ்வின், மகள் அகல்யா ஆகியோர் தூக்கில் சடலமாக தொங்கினர்.

பின்னர், மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.