குடோனில் பதுக்கிவைத்த 3,500 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது

 

குடோனில் பதுக்கிவைத்த 3,500 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது

திருப்பூர்

பல்லடம் அருகே தனியார் குடோனில் பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரத்து 500 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 4 பேரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கிடாத்துறை வலையபாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை

குடோனில் பதுக்கிவைத்த 3,500 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது

செய்யப்படுவதாக, மங்கலம் காவல்நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் கருப்புச்சாமி என்பவருக்கு சொந்தமான குடோனில் மூட்டை மூட்டையாக 3 ஆயிரத்து 500 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

குடோனில் பதுக்கிவைத்த 3,500 கிலோ குட்கா பறிமுதல் – 4 பேர் கைது

பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். குட்கா பொருட்களை பதுக்கியது தொடர்பாக, பொல்லிக்காளி பாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், கோவையை சேர்ந்த ஷாஜி பிரசாத் உள்ளிட்ட 4 பேரை கைதுசெய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.