ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

 

ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் பயணியிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்களை போலீசார் கைதுசெய்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர் ஓசூரில் இருந்து தனது குடும்பத்துடன் அரசுப்பேருந்தில் சென்னைக்கு திரும்பியுள்ளார். பேருந்து திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குத்தி சுங்கச்சாவடிக்கு வந்தபோது, பேருந்தில் இருந்த 3 பெண்கள்,

ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 பெண்கள் கைது

ஹரிகிருஷ்ணனின் பையில் இருந்த 3 சவரன் தங்க நகையை திருடிக்கொண்டு தப்பியோட முயற்சித்தனர். அவர்களை சுங்கச்சாவடி ஊழியர்கள் மடக்கிப்பிடித்து அம்பலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து, அங்கிருந்தும் தப்பியோட முயன்ற பெண்களை, போலீசார் விரட்டிப்பிடித்தனர். இதில் கல்பனா என்ற பெண் காவலருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து மூவர் மீதும் வழக்குப்பதிந்து, கைதுசெய்த போலீசார், நகைகளை மீட்டு ஹரிகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.