சாலை, கழிநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

 

சாலை, கழிநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சி பகுதியில் சாலை மற்றும் கழிவுநீர் காழ்வாய் அமைத்துத் தரக்கோரி 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள சுடுகாட்டில் உரிய கழிவுநீர் அமைப்புகளை ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர், குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துகொண்டு துர்நாற்றம் வீசி வருவதாக கூறப்படுகிறது.

சாலை, கழிநீர் கால்வாய் அமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

மேலும், சாலைகளும் தண்ணீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வந்துள்ளனர். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், இன்று திருப்பத்தூர் – கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.