முழு ஊரடங்கால் திருப்பத்தூரில் வெறிச்சோடிய சாலைகள்!
Apr 25, 2021, 13:20 IST1619337029000
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நகரின் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.
தமிழக அரசின் உத்தரவின்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
அதேபோல் கடைகள், வணிக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டது. இதனால், மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் திருப்பத்தூர் பேருந்து நிலையம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் நகரின் முக்கிய சாலைகள் மற்றும் கடை வீதிகளும் வெறிச்சோடின.
மேலும், ஊரடங்கினை மீறி வெளியே சுற்றும் நபர்களை கண்காணிக்க சாலைர்களில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.