நின்று கொண்டிருந்த லாரியில், கண்டெய்னர் லாரி மோதி விபத்து -2 பேர் பலி

 

நின்று கொண்டிருந்த லாரியில், கண்டெய்னர் லாரி மோதி விபத்து -2 பேர் பலி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கன்னிகாபுரம் பகுதியில் கண்டெய்னர் லாரி மோதி ஏற்பட்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியில் இருந்து பொள்ளாச்சிக்கு மாடுகளை ஏற்றி வந்த லாரி டயர் பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது , சென்னையில் இருந்து கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதிக்கு பார்சல் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த லாரியில் மோதியது. இந்த விபத்தில், கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் குண்டூர் கிழ்க்கையூர் பகுதியை சேர்ந்த பாலையா(45), மற்றும் மகாராஷ்டிராவை மாநிலத்தை சேர்ந்த கோபால் உள்ளிட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நின்று கொண்டிருந்த லாரியில், கண்டெய்னர் லாரி மோதி விபத்து -2 பேர் பலி

தவலறிந்து வந்த போலீசார், உடனடியாக சடலங்களைக் கைப்பற்றி வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஆம்பூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.