ஜிம்முக்கு போகாமலே உங்களை ஜம்முன்னு இருக்க வைக்கும் இந்த பொடி-தயாரிக்க ரெடியா ?.

 

ஜிம்முக்கு போகாமலே உங்களை ஜம்முன்னு இருக்க வைக்கும் இந்த பொடி-தயாரிக்க ரெடியா ?.

நம்முடைய கிராமபுறங்களில் அந்த காலத்தில் சில வீடுகளில் வீட்டிற்கு பின்னால், இந்த மரம் கட்டாயம் வளர்க்கப்படும். அந்த மரம் தான் முருங்கை மரம். காலப்போக்கில் வீட்டில் இந்த மரம் வளர்க்கும் வழக்கம் குறைந்துவிட்டது. காலப்போக்கில் அதை சாப்பிடுவதையும் நாம் மறந்துவிட்டோம். தொடர்ந்து இந்த முருங்கைக்கீரையை பொடி செய்து சாப்பிட்டு வந்தாலே நாம் இரும்பு மனிதராக மாறி விடலாம். முடி உதிர்வு பிரச்சினை ஆயுசுக்குமே வரவே வராது.

ஜிம்முக்கு போகாமலே உங்களை ஜம்முன்னு இருக்க வைக்கும் இந்த பொடி-தயாரிக்க ரெடியா ?.

சரிங்க! இந்த முருங்கைக்கீரைபொடி எப்படி செய்வது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோமா? பெரிய கட்டு அளவில் 2 கட்டு முருங்கைக்கீரையை வாங்கி காம்பு இல்லாமல் வெறும் கீரைகளை மட்டும் தனியாக, உருவி வைத்துக்கொள்ள வேண்டும். . சுத்தம் செய்த இந்தக்கீரையை அகலமான ஒரு வெள்ளைத் துணி அல்லது அகலமான ஒரு தட்டில் பரவலாக கொட்டி வீட்டுக்குள்ளேயே காற்றில் ஆற வைத்துவிடுங்கள். இயற்கையான காற்றில் தான் உலரவைக்க வேண்டும். ஐந்து நாட்கள் இதை அப்படியே நிழலில் உலர விட வேண்டும். தினமும் இரண்டு மூன்று முறை உங்கள் கையைக் கொண்டு லேசாக அப்படியே கிளறி விடுங்கள். இந்தக் கீரையில் தண்ணீர் படக்கூடாது. 5 நாட்கள் இந்த முருங்கைக்கீரையை நன்றாக காய்ந்த பிறகு கையில் எடுத்தாலே மொறுமொறுவென உடையும். – இதை மிக்ஸி ஜாரில் போட்டு பொடி செய்து, சல்லடையில் சலித்து நைஸ் பவுடராக தயார் பண்ணி வைத்துக் கொள்ளலாம். காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் 3 மாதங்கள் வரைகூட இந்த பவுடர் கெட்டுப்போகாமல் இருக்கும். ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி 1 ஸ்பூன் இந்தப் பவுடரை, 1 டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது மிக மிக நல்லது. முடிந்தால் ஒரு ஸ்பூன் இந்த பவுடரை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு, தண்ணீர் குடித்து விடுங்கள்.

ஜிம்முக்கு போகாமலே உங்களை ஜம்முன்னு இருக்க வைக்கும் இந்த பொடி-தயாரிக்க ரெடியா ?.


இப்படி மட்டும் செய்து பாருங்கள். எண்ணி 90 நாட்களில் உங்கள் உடல் ரீதியான அத்தனை பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.