பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், நாங்கள் சிறந்ததை வழங்குவோம்.. நடிகர் சுரேஷ் கோபி

 

பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், நாங்கள் சிறந்ததை வழங்குவோம்.. நடிகர் சுரேஷ் கோபி

கேரளாவை ஆட்சி செய்ய பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், நாங்கள் சிறந்ததை வழங்குவோம் என்று நடிகரும், திருச்சூர் பா.ஜ.க. வேட்பாளருமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.

கேரள சட்டப்பேரவை தேர்தல் வரும் 6ம் தேதியன்று நடைபெற உள்ளது. திருச்சூர் சட்டப்பேரவை தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடுகிறார். அவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எங்களை தேர்ந்தெடுங்கள். நாங்கள் சிறந்ததை வழங்குவோம். எங்களது செயல் வல்லமை மற்றும் திறனை சோதிக்க விரும்பினால் எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள்.

பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், நாங்கள் சிறந்ததை வழங்குவோம்.. நடிகர் சுரேஷ் கோபி
பா.ஜ.க.

பா.ஜ.க.வின் நிர்வாக திறமையின் செயல்வல்லமை சோதிக்க விரும்பினால், கடந்த 7 ஆண்டு கால மத்திய அரசின் நிர்வாக பணிகளை தணிக்கை செய்யுங்க. எங்களை ஆட்சியில் அமைத்தால் நம்பிக்கையுடன், விசுவாசத்துடன் மற்றும் நன்றாக வேலை செய்வோம். யார் முதல்வர் என்று என்னால் சொல்ல முடியாது. கட்சி தான் முடிவு செய்யும். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் சிறந்த நபரை முதல்வராக்கும்.

பா.ஜ.க.வை தேர்ந்தெடுங்கள், நாங்கள் சிறந்ததை வழங்குவோம்.. நடிகர் சுரேஷ் கோபி
ஸ்ரீதரன்

ஈ.ஸ்ரீதரன் சிறந்த மனிதர், கேரளாவுக்கு இந்த நேரத்துக்கு சிறந்தது. லவ் ஜிஹாத் மற்றும் சபரிமலை மீதான எந்தவொரு தலையீடும் சட்டத்தின் மூலமாகவே இருக்கும். ஒவ்வொரு தனிநபரின் உரிமையையும் பாதுகாக்க நாங்கள் ஒரு சீரான சிவில் சட்டத்தை கொண்டு வருவோம். ஜனநாயக ரீதியாக மக்கள்தொகை கட்டுப்பாட்டு செயல்முறையுடன் வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.