ஆண்களுக்கு மத்தியில் ஆடையில்லாமல் நின்ற பெண்கள் -மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்

 

ஆண்களுக்கு மத்தியில் ஆடையில்லாமல் நின்ற பெண்கள் -மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்


ஒரு கிராமத்து தலைவரின் குடும்பத்துக்கு சூனியம் வைத்துள்ளதாக ஒரு மந்திரவாதி கூறியதை நம்பி ,மூன்று பெண்களையும் ,ஒரு ஆணையும் ஊரார் முன்னிலையில் நிர்வாணமாக நடக்க வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது .
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள கார்வா பகுதியில் நாராயன்பூர் கிராமத்தில் அந்த ஊர் தலைவரின் இரண்டு மகள்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல்போனது .இதனால் அந்த ஊர் தலைவர் ஒரு ஜோசியரிடம் கேட்டபோது ,அவர் அந்த ஊரிலுள்ள மூன்று பெண்களும் ஒரு ஆணும் சேர்ந்து அவருக்கு சூனியம் வைத்துள்ளதாகவும் ,அதை நிவர்த்திக்க அவர்களை நிர்வாணமாக ஊரார் முன்னிலையில் போக செல்ல வேண்டுமென்றும் கூறினார்கள் .

ஆண்களுக்கு மத்தியில் ஆடையில்லாமல் நின்ற பெண்கள் -மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்


அதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊர் தலைவர் ,உடனே ஊர் மக்களை கூட்டி அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னார்.அதன்படி வியாழக்கிழமை இரவு அந்த ஊரிலுள்ள 50 ஆண்களுக்கு மத்தியில் அந்த மூன்று பெண்களையும் ,ஒரு ஆணையும் நிர்வாணமாக நடந்து போக சொன்னார்கள் .இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்ட அந்த ஊர் பொது மக்களில் சிலரும் ,வார்டு கவுன்சிலரும் இதை தடுக்க முற்ப்பட்டனர் .அப்போது அந்த ஊர் கலைவரின் ஆட்கள் அவர்களை தாக்கினர் .இதனால் இந்த சம்பவம் பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட்தும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்களுக்கும் ஆணுக்கும் உடைகளை வழங்கி அவர்களை மீட்டார்கள் .பிறகு இந்த சம்பவத்திற்கு காரணமான இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள் .

ஆண்களுக்கு மத்தியில் ஆடையில்லாமல் நின்ற பெண்கள் -மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்