3 மாடி கட்டிடம் இடிந்து நீர்ப்பாசன கால்வாயில் விழுந்தது – வைரலாகும் வீடியோ

 

3 மாடி கட்டிடம் இடிந்து நீர்ப்பாசன கால்வாயில் விழுந்தது – வைரலாகும் வீடியோ

கொல்கத்தா: மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் மூன்று மாடி கட்டுமான கட்டிடம் இடிந்து விழுந்தது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மேற்கு வங்காளத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள நிசிந்தாபூர் கிராமத்தில் மூன்று மாடி கட்டுமான கட்டிடம் இடிந்து விழுந்து அதன் அருகிலுள்ள நீர்ப்பாசன கால்வாயில் கவிழ்ந்தது. கொல்கத்தாவிலிருந்து 120 கி.மீ தூரத்தில் உள்ள தாஸ்பூர் தொகுதியில் இந்தக் கிராமம் உள்ளது. இந்த சம்பவத்தின் 30 விநாடி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வீட்டின் அருகிலுள்ள கால்வாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் துப்புரவுப் பணிகள் காரணமாக அதன் அஸ்திவாரம் பலவீனமடைந்ததாக கூறப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டு கட்டிடத்தில் விரிசல் உருவாக ஆரம்பித்துள்ளது. நேற்று பெய்த கனமழை காரணமாக கால்வாய் பள்ளத்தால் கட்டிடத்தின் அடித்தளம் ஸ்திரத்தன்மையை இழந்தது. இதன் காரணமாக அந்த வீடு இடிந்து விழுந்தது.

நீர்ப்பாசனக் கால்வாய்க்கு மிக அருகில் அந்த வீடு கட்டப்பட்டு இருந்ததால் அரசாங்க நிலத்தில் சட்டவிரோத கட்டுமானமாக அந்த வீடு இருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.