சீரியலால் சீரழிந்த குடும்பம்… விஷம் குடித்த மூன்று சகோதரிகள்!

 

சீரியலால் சீரழிந்த குடும்பம்… விஷம் குடித்த மூன்று சகோதரிகள்!

டிவியில் சீரியல் பார்ப்பதில் மூன்று சகோதரிகளுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் விபரீதத்தில் முடிவடைந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தின் நங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலஸ்வா கிராமத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

மூன்று சகோதரிகள் ஒன்றாக அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து, மூவருக்கும் தங்களுக்கு பிடித்த சீரியல் பார்ப்பது குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிப் போனதால் இறுதியில் மூவரும் விவசாயத்திற்கு வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளனர்.

சீரியலால் சீரழிந்த குடும்பம்… விஷம் குடித்த மூன்று சகோதரிகள்!

பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் ரீட்டா, ஷீட்டல் மற்றும் தனு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்தப் பெண்களில் பிஓபி தொழிலாளியாக பணிபுரிகிறார்.

பெண்களின் நிலை அறிந்த ஊர்மக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் ரீட்டா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஷீட்டல் மற்றும் தனு ஆகியோர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. போலீசார் இது குறித்து விசாரணை தொடங்கியுள்ளனர்.