கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி… அரசு உதவி கோரி பெண் மனு!

 

கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி… அரசு உதவி கோரி பெண் மனு!

தஞ்சை

கும்பகோணத்தில் கொரோனாவால் கணவர் உள்பட 3 பேரை இழந்த பெண் ஒருவர், அரசு உதவி கோரி தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் அனு அளித்தார்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகரை சேர்ந்தவர் இமானுவேல் விமல்ராஜ் (44). இவரது மனைவி எஸ்தர் ருஷ்யா (40). இவர்களுக்கு ஜோஷ்வா, ஜோய் ஆபிரகாம் என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இமானுவேல் விமல்ராஜ், கடந்த மாதம் 14ஆம் தேதி உயிரிழந்தார். அவரை தொடர்ந்து, நோய் தொற்றால் அவரது தந்தை ஜெயராஜ் (77), தாயார் கிளாரா (75) ஆகியோர் கடந்த 17-ஆம் தேதி உயிரிழந்தனர்.

கொரோனாவால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி… அரசு உதவி கோரி பெண் மனு!

ஜெயராஜ் – கிளாரா இருவரும் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். ஒரே நேரத்தில் வருமானம் ஈட்டிய மூவரும் இறந்தததால் எஸ்தர் ருஷ்யா வருமானமின்றி சிரமப்பட்டு வந்துள்ளார். மேலும், அவர் தனியார் பள்ளியில் ஆசிரியை ஆக பணபுரியும் நிலையில், கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் வேலையின்றி தவித்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று தனது மகனுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த எஸ்தர் ருஷ்யா, தனது சூழலை கருத்தில் கொண்டு அரசு வேலை வழங்கக்கோரி மனு அளித்தார். மேலும், அந்த மனுவில், குடும்பத்தில் வருமானம் ஈட்டி வந்த மூவரும் கொரோனாவால் இறந்ததால், வருமானம் இன்றி தவித்து வருவதாகவும், எனவே பாதிப்பில் இருந்து மீண்டு வரும் விதமாக தனக்கு ஏதாவது வேலை வழங்கி உதவு வேண்டும் என கேட்டுக்கொண்டார்.