“திமுவுக்கு துரோகம் செய்பவர்கள், கட்சிக்காரனாக இருக்க முடியாது”- துரை முருகன் பேச்சு

 

“திமுவுக்கு துரோகம் செய்பவர்கள், கட்சிக்காரனாக இருக்க முடியாது”- துரை முருகன் பேச்சு

திருப்பத்தூர்

திமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் திமுககாரன் ஆக இருக்க முடியாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரை முருகன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூரில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் திமுக சார்பில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகன், கூட்டத்தினரிடையே பேசினார். அப்போது, பெரியார் சுயமரியாதை மாநாடு நடத்தியபோது
முதன்முதலில் திருப்பத்தூரில் தான் திமுக கொடி ஏறியது என்றும், திருப்பத்தூர் சுயமரியாதை சுடர் நிறைந்த ஊர் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

“திமுவுக்கு துரோகம் செய்பவர்கள், கட்சிக்காரனாக இருக்க முடியாது”- துரை முருகன் பேச்சு

எப்போதும் தரமான பொருளை கொடுத்து, தரமான ஆட்சி செய்வது திமுக மட்டும் தான் என்ற துரை முருகன், அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும் குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், திமுகவிற்கு துரோகம் செய்கிறவர்கள் திமுக-காரனாக இருக்க முடியாது என்றும்,
அவர்களுடைய பிறப்பையே தான் சந்தேகப்படுவதாகவும் தெரிவித்தார்