ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்!

 

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்!

அதிமுக முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோப்பு வெங்கடாச்சலம் வருவாய் துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் வெங்கடாசலம் வெற்றி பெற்றார். ஆனால் அப்போதைய முதல்வரான ஜெயலலிதா அவருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கவில்லை.

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அப்போதும் தோப்பு வெங்கடாசலத்திற்கு அமைச்சர் பதவி மறுக்கப்பட்டது. இதனால் கட்சி மீது அதிருப்தியில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலம் 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். அப்போதும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அடுத்தடுத்து தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கோபமடைந்த தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக போட்டியிட்டார். இதனால் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்!

இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட 905 பேர் திமுகவில் இணைந்ததாக தகவல்.