தூத்துக்குடியில் காவலரை வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி உயிரிழப்பு!

 

தூத்துக்குடியில் காவலரை வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி உயிரிழப்பு!

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த, 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய துரைமுத்து என்ற ரவுடி சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தலைமை காவலர் சுப்பிரமணியன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது காவலர்களுக்கும் ரவுடிக்கும் இடையே தாக்குதல் ஏற்பட்டதால், ரவுடி நாட்டு வெடிகுண்டை ரவுடி வீசியுள்ளார். இரண்டாவது முறையாக வெடிகுண்டு வீசப்பட்ட போது, அது காவலர் சுப்பிரமணியனின் தலையில் விழுந்து வெடித்தது. இதில் படுகாயமடைந்த காவலர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தூத்துக்குடி வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் அடுத்தடுத்த பரபரப்புகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.

தூத்துக்குடியில் காவலரை வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி உயிரிழப்பு!

இந்நிலையில் காவலர் மீது வெடிகுண்டு வீசி கொன்ற ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு வீசிய துரைமுத்து படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். ரவுடி துரை முத்து மீது ஏற்கெனவே பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும், இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அவரை பிடிக்க முயற்சித்த போது நாடு வெடிகுண்டு வீசி தப்பிக்க முயன்றதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.