தூத்துக்குடி- பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை – சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

 

தூத்துக்குடி- பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை – சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி- பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை – சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

ஏரல் அருகே உள்ள சம்படி கிராமம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் செங்கமலம் (47). இவருக்கு 2 மகள் ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கணேசன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இறந்த பிறகு, கணேசன் தம்பி ஆண்டியப்பன் (42) என்பவருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று

தூத்துக்குடி- பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை – சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

காலை, வீட்டிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில், முகம் சிதைக்கப்பட்டு நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

தூத்துக்குடி- பலாத்காரம் செய்யப்பட்டு பெண் கொலை – சந்தேகத்தின் பேரில் 3 பேர் கைது

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஏரல் போலீஸ் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேரை பிடித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் நேற்று நள்ளிரவில் சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.