50 ஆயிரம் கொரோனா மரணங்களை நெருங்கும் நாடு இதுதான்!

 

50 ஆயிரம் கொரோனா மரணங்களை நெருங்கும் நாடு இதுதான்!

உலகம் முழுவதுமே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தினமும் 1.5 லட்சத்துக்கும் அதிகமான புதிய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 6 கோடியே 41 லட்சத்து 95 ஆயிரத்து 158 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 4 கோடியே 44 லட்சத்து 42 ஆயிரத்து 784 நபர்கள்.

50 ஆயிரம் கொரோனா மரணங்களை நெருங்கும் நாடு இதுதான்!

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 841 பேர். இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  நேற்று  மட்டுமே  11,891 பேர் உலகளவில் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள்.  தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர் 1,82,65,533 பேர்.

உலகளவில் அதிக கொரோனா மரணங்கள் நடந்தது அமெரிக்காவில்தான். அதற்கடித்த இடத்தில் பிரேசிலும் அடுத்து இந்தியாவும் உள்ளது. நான்காம் இடத்தில் மெக்சிகோ உள்ளதுக். மொத்தம் ஏழு நாடுகளில் 50 ஆயிரம் மரணங்கள் நடந்திருக்கின்றன.

50 ஆயிரம் கொரோனா மரணங்களை நெருங்கும் நாடு இதுதான்!

ஈரானில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி ஈரானின் கொரோனா மொத்த பாதிப்பு 9,89,572 பேர். இவர்களில் சிகிச்சையினால் குணமடைந்தவர்கள் 6,88,054 பேர். மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 48,990 பேர்.

ஈரானில் தினமும் 300க்கும் மேற்பட்ட கொரோனா இறப்புகள் நடந்து வருகின்றன. இதே விகிதத்தில் செல்லும் பட்சத்தில் மூன்றே நாட்களில் 50 ஆயிரத்தைக்கடந்துவிடும். நேற்று மட்டுமே 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிய நோயாளிகளாகக் கண்டறியப்பட்டிருக்கிறார்கள்.