திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில்- நிறைமணி திருவிழா!

 

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில்- நிறைமணி திருவிழா!

சென்னை அருகே , திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில், நிறைமணி வழிபாடு நடைபெற்றது.

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில்- நிறைமணி திருவிழா!

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பவுர்ணமி தினத்தில் நிறை மணி காட்சி நடைபெறும் .

இந்த ஆண்டும் கோவில் மூலஸ்தானம் மற்றும் முன் பகுதியில் பழங்கள், காய்கறிகள், தானியங்கள், எண்ணெய், இனிப்பு வகைகள் உள்ளிட்டவை பையில் கட்டி தொங்க விடப்பட்டன.

பழங்கள், காய்கறிகள் கட்டி தொங்க விடப்பட்டதை பார்ப்பதற்கு, தேவலோகம் போல காட்சி அளித்தது.

உலகில் அனைவரும் பசி, பட்டினி இல்லாமல் வாழ வேண்டும் என்றும் மழை, இயற்கை வளங்கள் பெருக வேண்டும் என்பதற்காகவும் இந்த வழிபாடு நடைபெறுகிறது. விவசாயம் தழைக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்வதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

3 நாட்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியின், கடைசி நாளில் இங்கு தொங்கவிடப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து கூட்டாஞ்சோறு செய்து அம்மனுக்கு படைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கப்படும்.
இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்ததுடன், பழங்கள், காய்கறிகளை புகைப்படம் எடுத்து சென்றனர்.

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயில்- நிறைமணி திருவிழா!