ராகுவின் சாரம் பெற்ற நட்சத்திரம் – திருவாதிரை பொதுப் பலன்கள்

 

ராகுவின் சாரம் பெற்ற நட்சத்திரம் – திருவாதிரை பொதுப் பலன்கள்

27 நட்சத்திரங்களில் ஆறாவது நட்சத்திரமாக ஒளிர்வது திருவாதிரை நட்சத்திரம் ஆகும்.

மேலும் ‘திரு’ என்ற அடைமொழியைப் பெற்றுள்ள முதல் நட்சத்திரம் திருவாதிரை தான். சர்ப்ப கிரகங்களில் கருநாகம் என்று கூறப்படும் ராகுவின் சாரம் பெற்ற நட்சத்திரம் திருவாதிரை ஆகும்.

பாம்புகளுக்கு இரட்டை நாக்குகள் இருப்பது போல இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இரண்டு விதமாகப் பேசும் ஆற்றல் கொண்டவர்களாகும்.  சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார் போல பேசுவதில் வல்லவர்கள். பலசாலிகளாக இருக்கும் அதே நேரத்தில் எளிதில் கோபம் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். அதனால் மற்றவர்களின் பார்வைக்கு முரடன் போல தெரிவார்கள். சிறந்த அறிவாற்றல், பகைவர்களை வெல்லும் சூரத்தனம், எடுத்த காரியத்தை சிறப்பாக முடிக்கும் பிடிவாதம் ஆகியவற்றை ஒருங்கே அமைய பெற்ற குணாதிசயம் கொண்டவர்கள்.

ராகுவின் சாரம் பெற்ற நட்சத்திரம் – திருவாதிரை பொதுப் பலன்கள்

தங்களுக்கு தெரியாததை கூட தெரிந்ததைப் போலப் பேசி மற்றவர்களை நம்ப வைப்பதில் கில்லாடி. ஆனால் வாக்குவாதத்தால் நல்ல நண்பர்களை இழக்கும் அபாயங்கள் இவர்களுக்கு உண்டு. ஆனால் உறவினர்களை காட்டிலும் நண்பர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆகவே நட்பு வட்டம் பெரிதாக இவர்களுக்கு இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஞாபக சக்தி அதிகம். காரமான உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். சமயோஜித புத்தி அதிகம் உடையவர்கள். எந்த வேலை என்றாலும் மிக உன்னிப்பாக கவனித்து வேலை செய்யக் கூடியவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க :சந்திரனின் நட்சத்திரம்-ரோகினி நட்சத்திர பொது பலன்கள்