திருவாரூரில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!

 

திருவாரூரில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!

திருவாரூரில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்ததையடுத்து மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

திருவாரூர் மாவட்டம் ராசப்பன் சாவடியை சேர்ந்த 62 வயது பெண் மற்றும் முடிகொண்டான் பேரளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 68 வயது ஆண் உட்பட 3 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்கள் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் உட்பட 70 நபர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,501 ஆக அதிகரித்துள்ளது.

திருவாரூரில் கொரோனாவால் ஒரே நாளில் 3 பேர் உயிரிழப்பு!

இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை திருவாரூரில் கொரோனா பரவல் குறைவாகவே இருந்த நிலையில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வருவோர் மூலம் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.