தேர்தல் முடிவை எட்டாத விசிக : திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

 

தேர்தல் முடிவை எட்டாத விசிக : திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான தீவிர களப்பணியில் இறங்கியிருக்கும் அரசியல் கட்சிகள், தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தற்போது பிஸியாக இருக்கின்றன. திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் விசிக, தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை நடத்திமுடித்து விட்டது.

தேர்தல் முடிவை எட்டாத விசிக : திருமாவளவன் பரபரப்பு பேச்சு!

மதிமுக மற்றும் விசிகவுக்கு எதிர்பார்த்த தொகுதிகளை திமுக வழங்கி விட்டதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், எத்தனை தொகுதிகள் வழங்கப்பட்டிருக்கிறது என்பது இன்னும் தெரிய வரவில்லை. திரைக்கு பின்னால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விட்டதால் கூட்டணிக் கட்சிகள் அவ்வப்போது கூட்டங்களை கூட்டி கட்சியினரை ஆயத்தப்படுத்தி வரும் நிலையில், விசிக தலைவர் திருமாவளவனும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டியிருக்கிறார். சென்னையில் இக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கூட்டத்தில் பேசிய திருமாவளவன், தேர்தல் தொடர்பாக நாம் இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை. தொடர்ந்து பேசி வருகிறோம். வேட்பாளர்கள் குறித்த முடிவுக்கு மாவட்ட செயலாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பேசினார். மேலும், தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.